What Our Subject is About
இலக்கியம் கலை மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் இலக்கியம். நமது பண்டைய வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழியைக் கற்றுக்கொள்வதோடு பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறது. இலக்கியம் கற்பதன் மூலம் பெறப்படும் மதிப்பு ஈடு இணையற்றது.
What We Do To Develop Students' Interest/Abilities
இலக்கியப் போட்டிகள், சிறுகதை மற்றும் கவிதை எழுதும் போட்டிகள் ,புதிர் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
மாணவர்கள் தேசிய அளவிலான விவாதப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதோடு, அவர்கள் தங்கள் திறமைகளை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் எங்கள் கல்லூரியில் இலக்கிய பட்டறைகளை நடத்தி தலைமைத்துவத் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
Who We Are
திருமதி மீரா சாமிநாதன் எங்கள் மாணவர்களுக்கு திறமையாகக் கற்பிக்கும் ஆசிரியராகத் திகழ தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் முடித்து கடந்த 13 ஆண்டுகளாக ராபிள்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கியம்,மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இலக்கியத்தில் சிறந்த தரத்தை எட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார். சிறந்த நல்லாசிரியர் தமிழ் ஆசிரியருக்கான விருதை 2014 ல் தமிழ் முரசு மூலம் பரிசு பெற்றுள்ளார்.
தமிழ்,மலாய்,சீனம் ஆகிய துறைகளில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மொழித்திறையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் உயர்தரம்-1, உயர்தரம் 2 - பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புடன் கற்பிக்கிறார்கள்.
What Our Students Say
இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு மக்களுக்குத் தேவையான அறிவு, சிந்தனை, மற்றும் திறன்களைப் பெறுவதற்கான முதல் படியாகத் தாய்மொழிக்கல்வி உள்ளது என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.