img-banner

Tamil Language


What Our Subject is About



ராபிள்ஸ் கல்வி நிலைய தமிழ்த்துறையின் பாடக்கலைத்திட்டம் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, கலைகள் முதலியவற்றை உள்ளடக்கியது. மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்து 21-ஆம் நூற்றாண்டு திறன்கள், விழுமியங்கள்  அடிப்படையில் மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தல்  மூலம் வளர்க்கப்படுகின்றன.

 


What We Do To Develop Students' Interest/Abilities



எங்கள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரிகளுக்கிடையிலான விவாதப்போட்டி, பேச்சுப்போட்டி, எழுத்து சார்ந்த போட்டிகளான கட்டுரை, சிறுகதை முதலியவற்றில் கலந்துகொண்டு சிறக்க வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. மேலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் யோகக் கலை முதலியவை அவ்வப்போது கற்றுத்தரப்படுகின்றன; மாணவர்களிடையே தலைமைத்துவ பண்புகளை மெருகேற்றும் வகையில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளைப் பிற இன மாணவர்களோடு இணைந்து ஏற்பாடு செய்வதோடல்லாமல் ஆடல், பாடல், நாடகம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் சார்ந்த ‘சங்கமம்’ என்கிற கலைவிழாவும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.

 


Who We Are



முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் கற்பித்தல் அனுபவம் உடையவர் மூத்த தமிழாசிரியர் முனைவர் ச ஜெகதீசன். இவர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, கல்லூரி, தேசியக் கல்விக் கழகம், கல்வி அமைச்சின் பாடக் கலைத்திட்ட, வரைவு மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றில் தடம் பதித்த கல்வியாளர். இருமுறை(2003, 2016) தமிழ்முரசின் நல்லாசிரியர் விருதினை வென்றவர். பல  உள்ளூர் மற்றும் அனைத்துலக மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவருடைய பிறத் திறன்களாவன: முன்னாள் வசந்தம் தொலைக்காட்சி செய்தி  வாசிப்பாளர், நடிகர், பாடகர், மற்றும் யோகக் கலை நிபுணர். இவர் தற்சமயம் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்மொழி உயர்தரம் 1 மற்றும் தமிழ்மொழி இலக்கியம் உயர்தரம் 2 ஆகியவற்றைக் கற்பித்து வருகிறார்.

 

 


What Our Students Say



சிங்கையின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான செவ்வியல்மொழி செந்தமிழை மகிழ்வூட்டும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்துக் கற்பதில் மாணவர்கள் பேருவகை அடைகின்றனர். மாணவர்கள் கல்லூரியைவிட்டுச் செல்லும்போது தன்னம்பிக்கையுடைய இருமொழித்திறன்(தமிழ்/ஆங்கிலம்)  மிக்க மாணவர்களாகத் திகழ்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.